Saturday, November 19, 2011

இரசித்த இருகுரல் ஒரு பாடல்


எஸ்.பி.பி ஜானகி அம்மா இணைக்குரலில் உருகும் பல பாடல்களில் நான் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று..

கலைஞர் தொலைக்காட்சியில் பாடிய ஒரு குழந்தைக்கு விமர்சனம் செய்யும்போது பாடகி அனுராதா ஸ்ரீராம் சொன்ன ஒரு விடயம் இங்கே ஞாபகத்துக்கு வருகிறது..அதாவது பாடும்போது குரலில் சரியான உணர்வுகளைக்காட்டும் திறமை இயற்கையிலேயே சிலருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட வரம். உண்மைதான் போலும்..

அத்தகைய வரம் பெற்றவர்களில் எனக்கு மிகவும் பிடித்த இணைக்குரல்கள் எஸ்.பி.பி,ஜானகி அம்மா...

ஓ ராகினி நீலாம்பரி என் ராகமோ நீதானடி
மனமே உன்னையே நின்னையே எண்ணியே
என் சுவாசம் யாவும் நீயே
என் வாசல் வழி வருவாயே மௌனம் ஏன்

இந்த மூன்றோ நான்கு வரிகளுக்கும் என்னவொரு உணர்வுபூர்வமாக எஸ்.பி.பி குரல் கொடுத்திருக்கிறார் என்பது பாடலை அனுபவித்துக்கேட்டவர்களுக்கு விளங்கும் என நம்புகிறேன்...

என்ன தான் அருமையான பாடும் திறமை குரல் வளம் இருந்தாலும் பின்னணி இசையை விட்டுப்பார்த்தால் பாடலின் அழகில் ஏதோ ஒன்று குறைந்தது போல தான் இருக்கும்...சில வரிகளுக்கு பின்னால் குழுக்குரலாக ஒலிக்கும்"ம்ம்ம்" கேட்பவர்கள் அதிகம் கவனிக்காவிட்டாலும் பாடலுக்கு பின்னே இருந்து அழகு சேர்க்கிறது என்பதே உண்மை...

"மௌனம் ஏன்" என மெதுவாக முடிக்க பின்னணி இசை உதவிக்கு வந்து ஒலித்து ஓயும் இடம் நான் மிகவும் ரசிக்கும் ஒன்று.."மௌனம் ஏன்" இழுவை தவிர்த்து சடுதியாக நிறுத்தியிருந்தால் பாடல் வரியின் உணர்வு அழகு எல்லாமே கொஞ்சம் சிதைந்தே போயிருக்கும் என்பது என் கருத்து..பாடலின் சந்தர்ப்பம் சூழல் வரிகள் சொல்லும் உணர்வுகள் அறிந்து அதற்கு ஏற்றால் போல இசை கொடுக்கும் இசையமைப்பாளர்கள் குறிப்பாக இந்தப்பாடலில் தேவாவின் பின்னணி இசை பாராட்டப்படவேண்டியதுதான்..

எஸ்.பி.பி க்கு சளைக்காதவராக இதே வரிகள் பெண்குரலாக ஜானகி அம்மா பாடுவதும் கொள்ளை அழகுதான்,...

ஆண் குரலில் "மௌனம் ஏன்" என்று வந்த வரிகள் பெண் குரலில் "மன்னவா" என்று ஜானகி அம்மா உருகும் அழகை நீங்களும் ஒருதடவை உருகி கேட்டுப்பாருங்கள்.:)

பாடல் வரிகள் வைரமுத்து போல தெரிகிறது..தவறென்றால் தெரிந்தவர்கள் திருத்திவிடுங்கள்..:)

முழுப்பாடலும் அழகாக இருந்தாலும் அந்த எடுப்பின் இசை+வரிகள் என்னை மிகவும் கொள்ளை கொண்டதால் அவற்றைப்பற்றி மட்டுமே கதைத்திருக்கிறேன்...

இந்தபாடலின் இசை இளையராஜா இல்லை என்பதால் இளையராஜா இசை அளவுக்கு தேவா எனக்கு நெருக்கம் இல்லை என்பதால் என் அபிமான பாடகர் எஸ்.பி.பி மீது ஒரு சின்ன வருத்தம் இருக்கிறது..அவராவது பாடும்போது "ஓ ராகினி"ற்கு பதிலாக "ஓ ஹாசினி "என்று பாடியிருக்கலாம் இல்லையா?:P:Pசந்தம் அழகாகத்தானே பொருந்திவருகிறது,..:P :))))


இதுவரைக்கும் பாடலை வீடியோ இல்லாமல் தான் கேட்டிருக்கிறேன்.இந்தப்பாடலை இப்போது இங்கே இணைக்கமுடியவில்லை:(குறிப்பிட்ட இணைப்பில் சென்று கேட்டுப்பாருங்கள்..

இந்த கொலைக்களத்தில் மாட்டி யாரும் உடல் உள்ளம் நொந்துபோனால் அதற்கு ஹாசினி பொறுப்பல்ல..வலைப்பூ வாசலிலேயே எச்சரிக்கைப்பலகை மாட்டித்தான் வைத்திருக்கிறேன்..:))))