Friday, January 17, 2014

தைப்பூசம்


இன்று தைப்பூசத்திருநாளாம். இன்று முருகனின் தரிசனம் காணக்கிடைக்கவில்லையென்று சிறுவருத்தம் அல்ல பெருவருத்தம் தான். :( கொஞ்சம் பழைய ஞாபகங்களை மீட்டி மனவருத்தத்தை ஆற்றலாம் என்று நினைக்கிறேன்.:)

ஓரிரு மாதங்களுக்கு முன் கைகூடியிருந்த இந்தியப்பயண ஞாபகங்களை கொஞ்சம் மீட்டிப்பார்க்கிறேன். அந்தப்பயணத்தில் முருகனின் ஆறுபடைவீடுகளுள் ஐந்து இடங்களைத்தரிசிக்கும் பாக்கியம் கிட்டியிருந்தது. துர் அதிஸ்டவசமாக பழமுதிர்ச்சோலை தவறவிடப்பட்டு விட்டது.(மதுரையில் திருப்பரங்குன்றம் சென்றிருந்தோம்).

முதல் மூன்று நாட்களிலேயே பழனி, திருச்செந்தூர் ,திருப்பரங்குன்றம் ,சுவாமிமலை என்று முருகனின் நான்கு படைவீட்டைத்தரிசித்தோம் என்று கூறியபோது கேட்பவர்கள் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுத்தான்போனார்கள் :) அவன் அழைத்தான்.நாம் சென்றோம் அவ்வளவுதான் :)

அதன்பின் எட்டுக்குடி,திருத்தணி,வடபழனி கோயில்களுக்கும் சென்றிருந்தோம்.

எந்தக்கோயிலிலும் இல்லாத அளவுக்கு அழகான அலங்காரமுருகனை சென்னை வடபழனியில் பார்த்தேன். அன்று மட்டும் முருகனை அவ்வளவு அழகாக அலங்கரித்திருந்தார்களோ என்னவோ தெரியவில்லை.

ஒரு வீடு தவிர மிகுதி அத்தனை படைவீடுகளுக்கும் அழைத்து தரிசனம் தந்தது அவனின் பெருங்கருணை தான். அதை நினைத்துப்பார்த்து இன்றைய மனவருத்தத்தை ஆற்றிக்கொள்கிறேன்.:)

விரிவான முழுமையான பயணக்கட்டுரையை இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

 "அருளதருளி எனையுமனதில் அடிமைகொளவே வரவேணும் அப்பா"