Sunday, October 23, 2011

அன்னைக்கோர் பதிவாஞ்சலி

இலங்கையிலுள்ள எனக்குத்தெரிந்த ஒரு சில அம்மன் ஆலயங்களை மனதில் வைத்து இந்த கிறுக்கலை வரைந்திருக்கிறேன்..ஆம் என் கிறுக்கல் தொல்லையில் இருந்து என் தாயும் தப்பவில்லை என்பது உங்களுக்கு வருத்தம் தரலாம்.பிள்ளையின் தொல்லையை அன்னை பொறுப்பாள் தானே..:)

எனக்கு மட்டுமல்ல இந்த உலகத்தில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் அன்னையாக அகிலத்தை ஆளும் என் தாய் அகிலாண்ட ஈஸ்வரிக்காக இந்தப்பதிவு...


பன்றியின் தலை தந்து
பக்தனை காத்த
பன்றித்தலைச்சி தாயே
மட்டுவிலூர் வாழும் மாரியும் நீயே
மலை சூழ் மாத்தளையின் முத்துமாரி தாயே
மனமிரங்க மாட்டாயோ 
மனக்குறைதான் தீராயோ
சிட்டிவேரம் வாழும் என் சிவகாம சுந்தரியே
வலிக்கும் வரை நடந்துவிட்டேன் 
வழி எதுவும் தெரியவில்லை
வந்திடம்மா வழித்துணையாய் என் பகவதித்தாயே
கருணையூர் வாழும் கருணைக்கடலே
புவனத்தை ஆளும் ஈஸ்வரி நீயே
கருணையூர் குடிகொண்ட புவனேஸ்வரித்தாயே
கண் திறந்து பாராயோ
கருணையது பொழியாயோ
அல்லல் தீர்க்க வந்திடம்மா
அல்வாயூர் முத்துமாரி தாயம்மா
அலைகடல் சூழ் நயினைதன் கரையிலமர்ந்தவளே
அரவக்குடைகொண்ட என் நாகபூசணி தாயே
உனை வேண்டிப்பாடுகிறேன் ஒயாது இங்கு
ஓடிவரமாட்டாயோ என் தாயே நீயிங்கு

பாமாலை நிதமுனக்கு சூட்டினேன் என் தாயே
பூவிழி மலர்ந்து பாராயோ உன் மகளை
அன்றாடம் உன்னருளை
மன்றாடி வேண்டினேன்
அன்பு மழை பொழியாயோ
என் அன்னையே அபிராமியே

உன் அன்பு வேண்டும்
எப்போதும் எனக்கிங்கு
கலக்கமிங்கு எனக்கேது
கலங்கரை விளக்கமாய்
காளியே நீயிருக்க
ஒரு காலும் மறவாது
உனை நினைக்கும் வரம் வேண்டும்
தாழாத உன் அன்பு
எப்போதும் உடன் வேண்டும்
இது போதும் தாயே
உந்தன் பேரன்பு
இது போதும் எனக்கு

இப்போது இந்தக்கணம் என் மனதை ஆட்கொண்டுகொண்டிருக்கும் பாடல் கொல்லூர் மூகாம்பிகை தாய் மீது பாடப்பட்ட மலையாளமொழிப்பாடல்.இப்பாடலையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.




2 comments:

சே.குமார் said...

நல்ல பாடல்... வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...

தாருகாசினி said...

நன்றி..உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

Post a Comment