Sunday, December 25, 2011

தனித்துவம் பேணுவோம்

தனிப்பட்ட வலைப்பதிவில் பேச்சுவழக்கில் எழுதி என்னை தனித்துக்காட்ட பிரித்துக்காட்ட விரும்புவதில்லை.அதனால் எழுத்துத்தமிழில் தான் பதிவுகள் எழுதிவருகிறேன்..

சினிமா பார்ப்பதில் கொஞ்சம், நகர வாழ்க்கை பல்லின கலாச்சார சங்கமம் ஒரு பக்கம்  இணையவழி பல நாட்டு நண்பர்கள் தொடர்பு என்று பேச்சு வழக்கில் 100  % ஈழவழக்கு இல்லாவிட்டாலும் ஈழமொழிநடையில் பதிவு எழுதும்போது பலமுறை யோசித்து இயன்றளவு சரியான ஈழவழக்கு சொற்கள் மட்டும் பாவித்து எழுதியிருக்கிறேன்.ஒரு வகையில் எதிர்கால சந்ததிக்கான ஆவணப்படுத்தல் அது.அதிலே எங்கள் தனித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்று ஒரேயொரு நோக்கம் மட்டும் தான்.

இன்று ஈழம் சம்பந்தமாக பொதுவலைத்தளமொன்றில் போடப்பட்ட ஒரு பதிவு பார்க்கக்கிடைத்தது."பொண்ணுங்க","பசங்க","பண்ணுங்க","வருவாங்க" இந்த சொற்கள் எல்லாம் ஈழ வழக்கில் இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருக்கிறது...

தனிவலைப்பதிவு எந்தமாதிரியும் இருக்கலாம்..ஆனால் ஈழம் என்று பொதுவில் வரும்போது எங்கள் தனித்துவத்தை பாதுகாப்பது அவசியம் என நினக்கிறேன் :(((

தனிப்பட்ட கருத்துத்தான்..தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்..

6 comments:

Anonymous said...

totally agree. I think it is important to stick to our language.

வந்தியத்தேவன் said...

ஈழத்தவர்கள் பொடியன் பெட்டைதான் பாவிப்பது

தாருகாசினி said...

AC,வந்தி அண்ணா
கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி..

யசோதா.பத்மநாதன் said...

ஆமேன்! :)

எஸ் சக்திவேல் said...

இன்று ஈழம் சம்பந்தமாக >>பொதுவலைத்தளமொன்றில் போடப்பட்ட ஒரு பதிவு பார்க்கக்கிடைத்தது."பொண்ணுங்க","பசங்க","பண்ணுங்க","வருவாங்க" இந்த சொற்கள் எல்லாம் ஈழ வழக்கில் இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருக்கிறது
------------

Sorry to type in English. Google transliteration is broken at the moment. I also asked the same question from a lot of bloggers. Even wondered the spoken Tamil is changed that much... (Basically I am out of the country from 1997).

Then I gave up worrying about this.

தாருகாசினி said...

உண்மைதான்..எம் தனித்துவத்தைப்பேணவேண்டும் என்ற அக்கறை எல்லோருக்கும் இருப்பதில்லை..வருகைக்கு நன்றி..

Post a Comment